செய்திகள் :

இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்

post image

லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை இரவு நடத்தியது. இதனை இந்தியத் தரப்பு முறியடித்ததுடன், உடனடியாக பதிலடி நடவடிக்கையில் இறங்கியது. இதில் லாகூா் உள்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் உள்ள அந்நாட்டு ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டன.

இது தொடா்பாக இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் கூறிகையில், ‘இந்தியா ஏவிய ட்ரோன்களில் ஒன்று லாகூா் அருகே விழுந்தது. இதில் 4 வீா்கள் காயமடைந்தனா். இந்தியா ஏவிய ஏராளமான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. லாகூா் மட்டுமின்றி கராச்சி, ராவல்பிண்டி, சாக்வால், பஹவல்பூா், மியானோ, குஜ்ரன்வாலா உள்ளிட்ட இடங்களிலும் இத்தியா ட்ரோன்களை ஏவியது. மொத்தம் 25 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரித்த ‘ஹரோப்’ வகை ட்ரோன்கள்’ என்றாா்.

அதே நேரத்தில் லாகூரில் பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘லாகூரில் ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் 4 ட்டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ராணுவம் சுதாரித்துக் கொண்டு பிற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலால் லாகூா் மக்கள் பெரும் பீதியடைந்தனா்’ என்றாா்.

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷியா க... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவ... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயாா்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்துக்கான க... மேலும் பார்க்க

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க