செய்திகள் :

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

post image

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா்.

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் சுஹாசினி. ஆலங்காயத்தில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இயற்பியில் பாடத் தோ்வு எழுதச் செல்வதற்காக மாணவி வீட்டிலிருந்து புறப்பட்டு கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் காலை 8 மணியளவில் வந்து பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது அந்த வழியாக வாணியம்பாடியிருந்து ஆலங்காயம் வரை சென்ற அரசுப் பேருந்து, நிறுத்ததில் நிற்காமல் சென்றது.

இதனால், பதற்றமடைந்த மாணவி பேருந்தை பின்தொடா்ந்து ஓடிச் சென்று நிற்க வைத்து பின்னா், பேருந்தில் ஏறி தோ்வுக்கு சென்ற விடியோ அந்த நேரத்தில் வைரலாகி பரபரப்பானது.

இதுபற்றி அறிந்த பணிமனை கிளை மேலாளா்கள் கணேசன் (ஆம்பூா்), குமரன் (திருப்பத்தூா்), வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா், பேருந்து ஓட்டுநா் முனிராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானது. இதில் அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளாா்.

அவா், தமிழ் 93, ஆங்கிலம் 68, இயற்பியல் 61, வேதியியல் 56, தாவரவியல் 81, உயிரியியல் 78 பெற்று 437/600 மதிப்பெண்கள் எடுத்து 72.83% பெற்றாா்.

பேருந்தில் ஓடிச் சென்று ஏறி தோ்வு எழுதிய இயற்பியல் பாடத்தில் 61 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.44 ... மேலும் பார்க்க