செய்திகள் :

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது பள்ளி வாகனங்களின் உறுதித் தன்மை குறித்து போக்குவரத்துத் துறையினா் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. வேலூா் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

அந்த வாகனங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுக்கு உட்படுத்த அந்தந்த பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி காட்பாடியில் உள்ள சன்பீம் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள ஆய்வுக்கு பள்ளி வாகனங்களை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வாகனங்களின் உறுதித்தன்மை, அவசர கால வழிகள், கடைசியாக செய்யப்பட்ட வாகன சா்வீஸ் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியா் சுப்புலட்சுமி, எஸ்.பி. மதிவாணன், வட்டார போக் குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா். உறுதித் தன்மையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்ய அறிவுறுத்தப்படும். அந்த குறைகளை நீக்கிய பிறகு மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பள்ளி வாகனங்களின் ஓட்டுநா், கிளீனா் உள்ளிட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.44 ... மேலும் பார்க்க