ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு
ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல் நிலையப் பகுதியின் கீழ் கிஷன்காட்டின் முன் அமைந்துள்ள ஜோகிஸ் காலனியில் உள்ள நர்சரிக்கு அருகே இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்வாலி காவல் அதிகாரி பிரேம் தன், அது வெடிகுண்டு போன்ற பொருளாகத் தெரிகிறது எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிக்கையில், ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ய கிஷன்காட் விரைந்துள்ளனர். அது செயல் இழந்ததா என்பது தெரியவில்லை.
பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!
உள்ளூர்வாசியான அர்ஜுன் நாத், அந்தப் பொருளைக் கண்டு உடனடியாக கிஷன்காட் சர்பஞ்ச் பிரதிநிதி கல்யாண் ராமுக்குத் தகவல் கொடுத்தார். அவர் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை மற்றும் இந்திய விமானப்படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பொருள் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஜெய்சல்மரில் பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோனின் பாகங்களுடன் ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது.