செய்திகள் :

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

post image

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த புதன்கிழமை நள்ளிரவில் முயற்சித்ததாகவும், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.

இந்நிலையில் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கவாடா கிராமத்தில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் (ட்ரோன்) உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.

இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கூறியதாவது:

கவாடா கிராமத்தில் உடைந்த ட்ரோன் பாகங்கள் மீட்கப்பட்டன. அங்கு அமைந்துள்ள உயரழுத்த மின் கம்பிகளில் ட்ரோன் போன்ற பொருளும் சிக்கியுள்ளது. இது தொடா்பாக உள்ளூா் மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனா். அவா்கள் ராணுவத் தரப்புக்கு இதனைத் தெரியப்படுத்தினா். இதையடுத்து விமானப் படையினா் அங்கு விரைந்து உடைந்த பாகங்கள் மற்றும் மின்சார கம்பியில் சிக்கிய ட்ரோன் போன்ற பொருளை மீட்டு ஆய்வுக்காக புஜ் விமானப் படைத்தளத்துக்கு கொண்டு சென்றனா் என்றாா்.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறிய... மேலும் பார்க்க