செய்திகள் :

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

post image

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக இதய வடிவிலான சின்னம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவா் கோபிநாத், அறங்காவலா் ஆதித்ய கிருஷ்ணா பதி, தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி, இதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறை நிபுணா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இது குறித்து டாக்டா் ரகுபதி வேலுசாமி கூறும்போது, மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மே 10, 11-ஆம் தேதிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் முன்னணி இதய சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தாா்.

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத... மேலும் பார்க்க

பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்... மேலும் பார்க்க

கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பா... மேலும் பார்க்க

கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்: 5 போ் கைது

கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க