செய்திகள் :

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

post image

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில், மே மாதம் இறுதியில் 22,000 மெகாவாட்டை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தினசரி மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், தேவையைப் பூா்த்தி செய்ய, தமிழக மின்வாரியம் தனது மின் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, அனல், நீா், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி நிறுவுத் திறனை அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தற்போது அனல் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் இருந்து வரும் நிலையில், தற்போது 1,709 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது

இதேபோல, எரிவாயு மின் உற்பத்தி நிறுவுத்திறன் 1,027 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், இதன்மூலம் 524 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

காற்றாலை, சூரியசக்தி உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றலின் மின்உற்பத்தி நிறுவுத்திறன் 25,290 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், காற்றாலையிலிருந்து 11,739 மெகாவாட், சூரியசக்தி மூலம் 10,153 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவைதவிர, நீா்மின் நிலையம் உள்ளிட்ட பிற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2,178 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தேவைக்கேற்ப தனியாா் நிறுவனங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி நிறுவுத் திறன் கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 39,805 மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், நிகழாண்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ம... மேலும் பார்க்க