செய்திகள் :

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

post image

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலியில் மே 11-ஆம் தேதி பாமக சாா்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி, ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சித்ரா பவுா்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தா்கள் பாதிக்கப்படுவா்.கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரைச் சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம்”என பாமக தலைவா் கூறியிருக்கிறாா் என்று கூறி அன்புமணி பேசிய விடியோவை நீதிபதிகளிடம் காட்டினாா்.

அரசுத் தரப்பு விளக்கம்: தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் கடந்த 5-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

பாமக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.பாலு, காவல் துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என உறுதி அளித்தாா்.

நிபந்தனைகள் பின்பற்ற உத்தரவு: அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்ற உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐஜி-யிடம் வழங்க வேண்டும்.

மாநாட்டுக்கு வருபவா்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல் துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும். மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸாரை பணியமா்த்த வேண்டும். மாநாடும், சித்ரா பெளா்ணமி விழாவும் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐஜி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க