செய்திகள் :

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!

post image

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியா மீது நேற்றிரவு முதல் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தி வருகின்றது.

பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை இடைமறித்து இந்திய ராணுவம் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பாகிஸ்தானின் எஃப்-16 உள்பட இரண்டு போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டு வருகின்றன.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலைய... மேலும் பார்க்க