செய்திகள் :

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

post image

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜம்மு, உதம்பூரில் இருந்து தில்லிக்கு மூன்று சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் எண் 04612 மணிக்கு புறப்பட்டுள்ள நிலையில், உதம்பூரில் இருந்து பகல் 12.45 மணியளவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும், இரவு 7 மணிக்கு ஜம்முவில் இருந்து 22 முன்பதிவுப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ர... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: இந்திய நாட்டின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்து வருவதாக கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.போர்ப் பதற்றம் குறித்து விங் கமாண்டர் வியோம... மேலும் பார்க்க

இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் எல்லையோரப் பக... மேலும் பார்க்க

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.மத்திய மின்னனுவ... மேலும் பார்க்க

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க