செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், இந்திய எல்லையில் போர்ப்பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இணையதளத்தைப் பயன்படுத்தும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்படிருக்கும் அறிவுறுத்தலில் ஆன்லைனில் வரும் தகவலைகளை கவனமுடன் கையாளவும் தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மிகக் கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் சைபர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கையாளவும். ஆன்லைனில் இருக்கும்போது கவனமுடன் இருக்கவும், தவறான தகவல்களுக்கு பலியாக வேண்டாம். நாட்டுப் பற்றுடன், கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்?

அதிகாரப்பூர்வ ஆலோசனைகள், உதவி எண்கள் மற்றும் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டும் பகிரவும்.

எந்தச் செய்தியையும் பகிர்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வப் பக்கத்தில் உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தவறாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால், புகாரளிக்கலாம்.

என்ன செய்யக்கூடாது?

நாட்டின் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை யாரும் வெளியிடவோ, வெளிப்படுத்தவோக் கூடாது.

உறுதி செய்யப்படாத தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.

வன்முறை அல்லது மதக் கலவரங்களைத் தூண்டும் தகவல்களை பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம் தகவல்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்... மேலும் பார்க்க

என் வீட்டருகே இடைவிடாது குண்டுவெடிப்பு சப்தங்கள்: முதல்வர் ஒமர் அப்துல்லா

நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜம்முவில் இப்போது மின் தடை. ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின... மேலும் பார்க்க

மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொ... மேலும் பார்க்க

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க