செய்திகள் :

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த சந்திராப்பூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு நீதிபதிகள் நிதின் சூர்யவன்சி, மகேந்திர சந்த்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட வாசிம் கானுடன் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் விருப்ப உறவு வைத்திருந்ததாகவும், அதன் பிறகு வேறு ஒருவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்ததாகவும், அதோடு அப்பெண் திருமணமானவர் என்றும் வாதிட்டார்.

ஆனால் அந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். "லிவ் இன் உறவுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண் வாசிமுடன் உறவு வைத்திருந்தாலும், அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவருடன் உறவு வைத்துக்கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கமோ அல்லது அவரின் கடந்த கால செயல்களோ அவர் உறவுக்கு முடியாது என்று சொல்வதற்கான உரிமையை மறுக்கவில்லை. ஒரு பெண் தாம்பத்திய உறவுக்கு முடியாது என்று சொல்லிவிட்டால் முடியாதுதான்.

அதன் பிறகுக் கட்டாயப்படுத்திச் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் குற்றம்தான். இவ்விவகாரத்தில் பெண்ணின் சம்மதத்தை மதிப்பீடு செய்வதில் அவரது நடத்தையோ அல்லது அவர் பாலியல் உறவு வைத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசாதத்திற்கு தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மே7 ஆம் ... மேலும் பார்க்க

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ ந... மேலும் பார்க்க

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க