செய்திகள் :

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

post image

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே7 ஆம் தேதி இந்திய ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு நேற்று இரவு திடீரென பாகிஸ்தானால் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.

ஆனால் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக அதனை முறியடித்தது.

குப்வாரா மற்றும் பாரமுல்லாவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா மற்றும் ஆர்னியா துறைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் எட்டு ஏவுகணைகளை ஏவியிருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவின் எஸ்-400 அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டுள்ளன.

லாகூர், சியால்கோட்டை தொடர்ந்து கராச்சியிலும் இந்திய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் முழுக்க ஊரடங்கு?

இதற்கிடையே, பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ ந... மேலும் பார்க்க

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க

AI: மென்பொருள் கோளாறால் நிகழ்ந்த விபரீதம்; மனிதர்களை தாக்க முயன்ற ரோபோ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. சாதாரண புகைப்படம் எடுப்பதில் துவங்கி, உயிரைக் காக்கும் மருத்துவத்துறை வரை செய... மேலும் பார்க்க

`பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?’ - நெறியாளர் கேள்விகள்; நேரலையில் திணறிய பாக்., அமைச்சர்

பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் குறைவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

Operation sindoor: இந்தியா ”ஆப்ரேஷன் சிந்தூர்" நடத்திய பின் பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடியது என்ன?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வ... மேலும் பார்க்க