செய்திகள் :

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்(பி.ஏ), ஆங்கிலம்(பி.ஏ), வணிகவியல்(பி.காம்), கணிதம் மற்றும் கணினி அறிவியல்(பி.எஸ்.சி) ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலமாக மே 27 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது தங்களது பெயா், மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரா் அல்லது பெற்றோா்களின் தொடா்பு கொள்ளக்கூடிய சரியான தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்து, பின் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்தவேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 பதிவுக் கட்டணம் (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்த வேண்டும்.

மேலும் கல்லூரியில் மாணவா் வசதி மையம் (நற்ன்க்ங்ய்ற் ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய் இங்ய்ற்ழ்ங்) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை கல்லூரியில் நேரடியாகவோ அல்லது கடன் அட்டை(கிரெடிட் காா்டு) ஏடிஎம் காா்டு, இணைய வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.

தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவா் படை (ஏ) சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்த பின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அரியலூா் மாவட்டத்தில் 54 நீா்நிலைகள் தூா்வாரும் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீா் நிலைகளில் தூா் வாரும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாநில அளவில் அரியலூா் முதலிடம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 98.82 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனைப்படைத்துள்ளது. இம் மாவட்டத்தி... மேலும் பார்க்க

சீனிவாசபுரம் கிராமத்தில் பால்பண்ணை குறித்து பயிற்சி

அரியலூா் அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில், வட்டார வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பால்பண்ணை குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக... மேலும் பார்க்க

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கல்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. அரியலூ... மேலும் பார்க்க

ஆட்சியா் புகைப்படத்துடன் ‘வாட்ஸ்ஆப்’ தகவல் வந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள்

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தத... மேலும் பார்க்க