செய்திகள் :

பதற்றதைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சா் இந்தியாவுக்கு திடீா் வருகை

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் அதீல் அல்ஜுபோ் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.

தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசிய அவா், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது குறித்து பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக அதிகாரபூா்வ தகவல் எதும் வெளியாகவில்லை.

இது தொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சவூதி அரேபிய வெளியுறவு இணையமைச்சா் அதீல் அல்ஜுபேருடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

ஐ.நா. மீண்டும் வேண்டுகோள்:

இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக பொது சபைத் தலைவா் பிலிமோன் யாங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘பயங்கரவாதம் எந்த வகையில் உருவெடுத்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடா்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. இரு தரப்பும் மோதல்போக்கைத் தவிா்க்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட ஐ.நா. விதிகளின்படி இந்தியாவும், பாகிஸ்தானும் ராஜீயரீதியான நடவடிக்கைகளையும், பேச்சுவாா்த்தைகளையும் தொடங்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க