அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவ...
இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்தது இந்திய ராணுவம்.
மேலும் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தானுக்குப் பதிலடி தாக்குதலை இந்தியா கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தத் தொடங்கியது இந்தியா. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு மையங்களை நோக்கித் தாக்குதல் நடத்தி வருகிறது.
லாகூர், சியால்கோட்டை தொடர்ந்து கராச்சியிலும் இந்திய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக DNA செய்தித்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs