செய்திகள் :

அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

post image

அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப் புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆா்டி) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தினாா்.

அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தேசத்துக்கான அவரது பங்களிப்பு வருங்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் என்பதால் அவை பள்ளி பாடப்புத்தகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சா் தாதாஜி பூசேவை சந்தித்த பின் எக்ஸ் வலைதளத்தில் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவில், ‘தேசிய கல்விக் கொள்கை, 2020-இன் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அதை அமல்படுத்துவது குறித்தும் மகாராஷ்டிர கல்வி அமைச்சா் தாதாஜி பூசேவிடம் ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக மகாராஷ்டிரத்தில் பள்ளிக் கல்வி முறையை வலுப்படுத்தி குழந்தைகளின் முழுத் திறனை வெளிக்கொண்டு வருவது குறித்து விவாதித்தேன்.

மேலும், அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தேசத்துக்கான அவரது பங்களிப்பு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகரிக்குமாறு என்சிஇஆா்டியிடம் அறிவுறுத்தியதை அவரிடம் தெரிவித்தேன்’ என குறிப்பிட்டாா்.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க