India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை
நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக, மூவா் குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.
இந்தக் குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அண்மையில் அறிக்கையை சமா்ப்பித்தது. தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 50-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்தது. யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததாக அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இக்குழு உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், துறைசாா் விசாரணை நடைமுறைகளின்படி, மூவா் குழுவின் அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளாா்.
முன்னதாக, இயற்கை நீதி கோட்பாட்டின்கீழ் விசாரணைக் குழுவின் அறிக்கை நகலை நீதிபதி வா்மாவுக்கு அனுப்பி, அவரிடம் தலைமை நீதிபதி பதில் பெற்றிருந்தாா்.
துறைசாா் விசாரணை நடைமுறைகளின்கீழ், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நீதிபதியை தாமாக பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுரை வழங்குவாா். நீதிபதி பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையைத் தொடங்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பரிந்துரை கடிதம் அனுப்புவாா். அதன்படி, தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பிப்பாா்.
பண சா்ச்சையைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.