செய்திகள் :

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

post image

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

அக்குழந்தைகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது சிரமம் என்று கருதி அக்குழந்தையின் பெற்றோர் குழந்தைகளை மருத்துவமனையில் அனாதையாக விட்டு விட்டுச் சென்று சென்றுவிட்டனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமே குழந்தைகளைத் தங்களது பொறுப்பில் எடுத்து அவர்களுக்கு ரித்தி மற்றும் சித்தி என்று பெயரிட்டு வளர்த்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிய ரித்தி, சித்தி
பிறந்தநாள் கொண்டாடிய ரித்தி, சித்தி

அக்குழந்தைகள் இடுப்புக்குக் கீழே ஒட்டிய நிலையில் பிறந்திருந்தனர். அவர்களை மருத்துவர்கள் 30 மணி நேரம் கடினமான ஆப்ரேசன் செய்து இருவரையும் தனித்தனியாகப் பிரித்தனர்.

குழந்தைகளைத் தனித்தனியாகப் பிரித்த பிறகும் தொடர்ந்து அதே மருத்துவமனையில் வைத்துப் பராமரித்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு குழந்தைகளும் இதே மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

அவர்களுக்கு அடிக்கடி பிசியோதெரசி தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான மருந்து, கல்வி போன்ற அனைத்தையும் மருத்துவர்களும், செவிலியர்களும் செய்து கொடுக்கின்றனர்.

அவர்கள் இரண்டு பேரையும் பிரிக்க ஆப்ரேசன் செய்த மருத்துவர் பிரத்னயா இது குறித்து கூறுகையில், ''மருத்துவர்களும், செவிலியர்களும் அவர்களுக்குத் தேவைப்படும்போது உடனிருக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடிய ரித்தி, சித்தி
பிறந்தநாள் கொண்டாடிய ரித்தி, சித்தி

இரண்டு பேருக்கும் இருக்கும் சில பிரச்னைகளை ஒரு போதும் சரி செய்ய முடியாது. ஆனாலும் இரண்டு பேரும் அதனைத் தகுந்தபடி கையாள்கின்றனர்.

குடல் இரைப்பை பிரச்னை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நன்றாகப் படிக்கின்றனர். அவர்களின் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படுகிறது'' என்று தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளுக்கும் இப்போது 13 வயதாகிவிட்டது. அவர்கள் தங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சூழ தங்களது 13வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசாதத்திற்கு தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மே7 ஆம் ... மேலும் பார்க்க

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ ந... மேலும் பார்க்க

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க