செய்திகள் :

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

post image

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்வு முடிவில் மாணவிகள் 96.70 சதவிகிதத் தேர்ச்சியும்,  மாணவர்கள் 93.16 சதவிகித தேர்ச்சியும் பெற்றிருந்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்

விக்கிரவாண்டி தொகுதியில் 23 மேல்நிலை பள்ளிகளில் படித்த 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தன் சொந்த செலவில் 'தேர்வை வெல்வோம்' என்ற KEY ANSWERS புத்தகத்தை எம்எல்ஏ அன்னியூர் சிவா வழங்கி இருக்கிறார்.

இந்த KEY ANSWERS புத்தகம் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், இதனால் நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று  தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அன்னியூர் சிவாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

‘தேர்வை வெல்வோம்’ என்ற KEY ANSWERS புத்தகத்தை வழங்கிய எம்எல்ஏ
‘தேர்வை வெல்வோம்’ என்ற KEY ANSWERS புத்தகத்தை வழங்கிய எம்எல்ஏ

மேலும் இதுதொடர்பாக  பேசிய சின்னத்தச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், “ எங்கள் பள்ளியில் 98 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். KEY ANSWERS புத்தகம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக எளிமையானதாக இருந்தது இந்தப் புத்தகம். இதன் மூலம் எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருக்கிறார்கள்” என்று  எம்எல்ஏ-விற்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். 

வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்: 'என்ன படிக்கலாம் என்பதில் குழப்பமா?'- இதோ உங்களுக்கான தகவல் மைய எண்!

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரிந்துவிடும். தேர்வு முடிவு தெரிந்த பின்பும், 'என்ன படிக்கலாம்?', 'எந்தக் கல்லூரியி... மேலும் பார்க்க

வழக்கறிஞராகும் கனவு; 76 வயதில் 12-வது வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி!

மகாராஷ்டிராவில் 12வது வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை மும்பை நைகாவ் பகுதியை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோரக்நாத் மோரே என்பவரும் எழுதி இருந்தார். கோரக்நாத் 3... மேலும் பார்க்க

NCERT: 'முகலாயர்கள் வேண்டாம்; இந்தி வேண்டும்!' - மத்திய அரசே கல்வியிலும் அரசியலா? | In Depth

மும்மொழி கொள்கை, பி.எம் ஶ்ரீ திட்டம்... வரிசையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் முகலாய மன்னர்களின் குறிப்புகளை நீக்கியுள்ளதும் விவாதப் பொருளாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகை... மேலும் பார்க்க

``விருப்பம் என்று சுருங்கி விடாதீர்கள்; தேடலை விரிவுப்படுத்துங்கள்..'' - கல்வியாளர் நெடுஞ்செழியன்

+2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய +2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்? எனும் மாணவர்களுக்கான உயர்க... மேலும் பார்க்க

கோவை: UPSC/TNPSC குரூப் - 1, 2 போட்டி தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம்; முழு விவரம்

UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவச பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அ... மேலும் பார்க்க