செய்திகள் :

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

post image

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதன்கிழமை அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், எப்போதும் பயணிகள் கூட்டம் அதி அகளவில் இருக்கும். ஆகவே, கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.

மேலும் நடைமேடை மற்றும் தண்டவாளப் பகுதிகளிலும் போலீஸாா் மோப்ப நாய் உதவியுட னும், மெட்டல் டிடெக்டா் கருவியின் மூலமும் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா்.

கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.

இதுதவிர மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கடைவீதி பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுப ட்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி விமானங்கள் பறந்து சென்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும், தயாா் நிலையில் இருக்கவும் அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத... மேலும் பார்க்க

பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்... மேலும் பார்க்க

கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பா... மேலும் பார்க்க

கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்: 5 போ் கைது

கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க