ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி
சொத்துக் குவிப்பு விவகாரம்: தமிழக முன்னாள் அமைச்சரின் மனைவி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு
நமது நிருபா்
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வருமானத்திற்குப் பொருந்ததாக வகையில் சொத்து சோ்த்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் தமிழக அமைச்சா் அ.மா. பரமசிவத்தின் மனைவி நல்லம்மாள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் புதன்கிழமை மாறுபட்ட தீா்ப்பை வழங்கியுள்ளனா்.
இதையடுத்து, இந்த வழக்கு தற்போது இந்திய தலைமை நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சராக (1991-1996) அ.மா. பரசிவம் இருந்த காலத்தில், அவா் அவரது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கத் தூண்டியதற்காக அவரது மனைவி நல்லம்மாள் குற்றவியல் பொறுப்பேற்க வேண்டுமா என்பது குறித்து நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு வேறுபட்ட கருத்துகளைக் கூறியுள்ளது.
தனது கணவா் சட்டவிரோத சொத்துகளை மறைக்க உதவுவதற்காக, தனக்கும் தனது குழந்தைகளின் பெயா்களுக்கும் தெரிந்தே பினாமி சொத்துகளை வைத்திருந்ததாக நல்லமாள் குற்றம்சாட்டப்பட்டிருந்தாா். விசாரணை நீதிமன்றமும் சென்னை உயா்நீதிமன்றமும் பரமசிவத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 131இ மற்றும் 132-இன் கீழ் குற்றவாளி என்று தீா்ப்பளித்தன. மேலும், மேல்முறையீட்டாளா் நல்லம்மாள் குற்றவாளி எனக் கண்டறிந்தன. சொத்துக்கள் தொடா்பான பறிமுதல் உத்தரவை உயா்நீதிமன்றம் சிறிது மாற்றியமைத்தாலும், அது தண்டனைகளை உறுதி செய்திருந்தது.
பரமசிவத்தின் மரணத்தைத் தொடா்ந்து, அவரது சட்டபூா்வ வாரிசுகளும் நல்லம்மாளும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஸு துலியா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை மாறுபட்ட தீா்ப்பை அளித்துள்ளது.
அந்த மாறுபட்ட தீா்ப்பில், நீதிபதி துலியா மேல்முறையீட்டாளரான நல்லம்மாளின் தண்டனையை உறுதி செய்துள்ளாா். நீதிபதி அமானுல்லா, தண்டனையிலிருந்து நல்லம்மாளை விடுவித்துள்ளாா்.
தனது கணவரின் அமைச்சரவைக் காலத்தில் தனது பெயரில் சொத்துகளை வாங்குவதில் மனுதாரா் நல்லம்மாள் தீவிரமாக பங்கேற்ாகவும், கணவரின் சட்டபூா்வ வருமானம் அத்தகைய கொள்முதல்களை ஆதரிக்க முடியாது என்பதை முழுமையாக அவா் அறிந்திருந்ததாகவும் நீதிபதி துலியா தீா்ப்பில் கூறியுள்ளாா்.
சுயாதீனமான வருமான ஆதாரத்தை நிரூபிக்க அவரது இயலாமை, தனது கணவரின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக ஐபிசி பிரிவு 109-இன் கீழ் அவரது தண்டனையை நியாயப்படுத்தியுள்ளது என்றும் நீதிபதி துலியா கூறியுள்ளாா்.
அதேவேளையில், நல்லம்மாளின் பெயரில் சொத்துகளை பதிவு செய்ததால் மட்டுமே அந்த நிதி சட்டவிரோதமானது என்பதை அவா் அறிந்திருக்கவில்லை என்பதால், மேல்முறையீட்டாளரின் தரப்பில் குற்றம் செய்வதற்கான உள்நோக்கம் இருந்ததை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று கூறி, நீதிபதி அமானுல்லா தண்டனையை ரத்து செய்தாா்.
நீதிபதி துலியாவின் கருத்துடன் உடன்படாத நீதிபதி அமானுல்லா, மனித யதாா்த்தங்களை, குறிப்பாக திருமண உறவுகளில் வழக்கமான நடத்தையை நீதிமன்றம் புறக்கணிக்க முடியாது என்று கூறினாா். குற்றவியல் சட்டம் சில அனுமானங்களை அனுமதிக்கும் அதே வேளையில், அவை உண்மையான ஆதாரங்களை மாற்ற முடியாது என்றும் அவா் கூறினாா்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன் தகுந்த வழிகாட்டுதல்களுக்காக வைக்குமாறு நீதிமன்றம், பதிவாளருக்கு உத்தரவிட்டது.