செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூா் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலளிக்க ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லைப் பகுதியில் (எல்ஓசி) மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூா் நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் தங்களின் குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலவுவதால் பாகிஸ்தானுக்கு செல்லும் மற்றும் பாகிஸ்தானில் இருந்து புறப்படும் 50-க்கும் மேற்பட்ட சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எச்சரிக்கை:

லாகூா் உள்ளிட்ட பாகிஸ்தான் முக்கிய நகரங்களில் இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பதால் அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.

தீவிர மோதல் நடைபெறும் இடங்களிலிருந்து அமெரிக்கா்கள் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாத சூழலில், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க