செய்திகள் :

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!

post image

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போர் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எல்லையோர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிக்க: 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!

அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்தும், மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பார்மெர், ஜெய்சால்மர், பிக்கானர் மற்றும் ஸ்ரீகங்காநகருக்கு தலா ரூ. 5 கோடி விடுவித்தும் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பஜன்லால் சர்மா கூறியதாவது: எங்களது மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், ராஜஸ்தான் மிகவும் முக்கிமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த அவசரநிலையில் நாம் அனைவரும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நிதியுதவியாக எல்லையோர மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ சேவை, குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எ... மேலும் பார்க்க

போர் சூழல்: சிஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!

புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை ... மேலும் பார்க்க

களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது தற்போது கடற்படையும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தனின் 2 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன!

ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 ட்ரோன்களை ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.நெளஷேரா பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரை மணிநேரத்துக்கும் மேலாக கடுமையான பீரங்கி தாக்குதல் நடந்து வ... மேலும் பார்க்க