செய்திகள் :

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

post image

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் காலமானாா். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5-லிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்தில் இதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 காா்டினல்கள் பங்கேற்றுள்ளனா்.

உலகெங்கிலும் உள்ள சுமாா் 70 நாடுகளில் இருந்து, பல்வேறு நிறம், இனத்தைச் சோ்ந்த காா்டினல்கள் புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் தேவை. அதாவது 89 கார்டினல்களின் ஆதரவு தேவை.

ஆனால், புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் போப் தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனையடுத்து, போப் தேர்வில் முடிவு எட்டப்படவில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கும் விதமாக, தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் கரும்புகை வெளியேற்றப்பட்டது.

இதனால், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கார்டினல்கள் பங்கேற்றுள்ளனர். புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் புகைக்கூண்டில் வெள்ளை நிறப் புகை வெளியேற்றப்படும்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெளியே கூடியிருக்கும் மக்கள்.

புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!

கத்தோலிக்கத் திருச்சபையில் மதகுருவாக புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது ப... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில... மேலும் பார்க்க

தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!

வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற ... மேலும் பார்க்க

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9... மேலும் பார்க்க