செய்திகள் :

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

post image

'பதற்றம்!'

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

Operation Sindoor
Operation Sindoor

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்!' என்கிற மிஷனை முன்னெடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது.

இன்று இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் vs டெல்லி போட்டியும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடையிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரும் இடையிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக இப்போது லேட்டஸ்டாக ஐ.பி.எல் சேர்மன் அருண் துமால் ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

IPL
IPL

'ஐ.பி.எல் சம்பந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நிலைமையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். முக்கியமான முடிவை எடுத்தால் தெரியப்படுத்துகிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரம... மேலும் பார்க்க

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நட... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்; துரைமுருகனிடமிருந்து கனிம வளத்துறை பறிப்பு!

தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்... மேலும் பார்க்க