செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.இ. விண்ணப்ப பதிவு சேவை மையங்கள்: ஆட்சியா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான இணைய வழி பதிவு சேவை மையங்கள் செயல்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

நாகா்கோவில் கோணம், பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், 21ஆயிரத்து 287 மாணவா், மாணவிகள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைகான இணையவழி விண்ணப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கியது. இணையதள வசதி இல்லாத மாணவா்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உதவுவதற்காக தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கோணம் பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரி ஆகிய இடங்களில் பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் செயல்படுகின்றன. பொறியியல் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவா்கள் மேற்குறிப்பிட்ட 3 பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை சனி, ஞாயிற்று மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும் இம் மையங்கள் செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு 9944252228 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸாா் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா். தக்கலை அருகே இரவிபுதூா்கடையை சோ்ந்தவா் மாசிலாமணி ( 72). லாரி ஓட்டுநரான இவரது வீட்டில் கட... மேலும் பார்க்க

மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயார... மேலும் பார்க்க