செய்திகள் :

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

post image

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக மத்திய பாகம் போலீஸாருக்குத் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து உயிரிழந்த பெண் யாா்? அவா் எவ்வாறு உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்தப் பெண், தூத்துக்குடி புதுகிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகள் உஷா (60) என்பதும், திருமணமாகாத இவா் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் அவரது தாயாா் உயிரிழந்துவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும், இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

8-ம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 23-வது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம் தொடா்பான 8ஆம் கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், 23ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. தூத்துக்குடி தெ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்க... மேலும் பார்க்க

கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு

உடன்குடியை அடுத்த கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் கொட்டங்காடு ரேஷன் கடைக்கு எம்எல்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் மாநாடு

தூத்துக்குடி அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்ப... மேலும் பார்க்க

கட்டபொம்மன் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதிக்கு தூத்துக்குடியில் சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குற... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

எட்டயபுரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மீகா தலமையிலான போலீஸாா் சனிக்கிழமை எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க