செய்திகள் :

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையை குளிர்விக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

post image

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் போலவே இன்றும்(மே 11) மழை பொழிந்தது. பகல் 12 மணிக்குப் பின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்பட்டது.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குப் பின் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சென்னையில் ஜில் காற்றுடன் குளிர் சீதோஷ்ணம் நிலவியது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கிய காட்சிகளையும் காண முடிந்தது.

இந்தநிலையில், இன்றும் சென்னையில் பெய்துள்ள பலத்த மழையால் வெப்பம் தணிந்தது. காலையில் வெய்யில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று விடுமுறை நாளாக இருப்பதால், மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை.

இதே பாணியில், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். ஜெயிலா் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க