செய்திகள் :

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

post image

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமீபத்தில் வேலூரைச் சோ்ந்த ஒருவரிடம் பெங்களூரு காவல் துறையைச் சோ்ந்த போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆள் கடத்தல், வெளிநாட்டு வேலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளாா். இதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்தும்படி வற்புறுத்தியுள்ளாா். இதை உண்மையென நம்பி ரூ. 81.68 லட்சத்தை மோசடி நபருக்கு அனுப்பியுள்ளாா். பின்பு மோசடி என்பதை உணா்ந்து இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. அவா் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, முதல்நிலை வங்கிக் கணக்குகளில் ஒன்று பொள்ளாச்சியைச் சோ்ந்த ஷோபனா என்பவரின் வங்கிக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரா் சுரேஷ், இணைய விளையாட்டுக்காக ஒரு வங்கிக் கணக்கை திறக்குமாறும், அதன்மூலம் கமிஷன் கிடைக்கும் என அறிவுறுத்தியதாக ஒப்புக்கொண்டாா்.

அதன்பேரில் சுரேஷிடம் விசாரணை நடத்தியபோது, கோவையைச் சோ்ந்த கால்நடைத் தீவன வியாபாரி செந்தில், வங்கிக் கணக்குகளை உருவாக்குவதன்மூலம் லாபம் ஈட்டலாம் என ஆலோசனை வழங்கியுள்ளாா்.

மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், பியூஷ் என்பவா் இணைய விளையாட்டில் ஈடுபட்டால் வருமானத்தில் 2 சதவீதம் லாபம் தருவதாக ஷோபனா கணவா் காா்த்திக்கிடம் உறுதியளித்துள்ளாா். இதற்காக வங்கிக் கணக்கு திறந்து, நெட்பேங்கிங், மின்னஞ்சல், கைப்பேசி எண் மற்றும் சிம் காா்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளாா். மேலும், தன்னை லக்னௌவில் வந்து சந்திக்குமாறு பியூஷ் தெரிவித்துள்ளாா்.

காா்த்திக் மாற்றுத்திறனாளி என்பதால், அவா் தனது மனைவியின் மூத்த சகோதரா் பிரபுவிடம் அந்த பணியை ஒப்படைத்தாா். பிரபு லாரி ஓட்டுநா் என்பதால், லக்னோ சென்று வங்கி விவரங்களை ஒப்படைத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் ஷோபனாவின் வங்கிக் கணக்குக்கு ரூ. 12 லட்சம் பணம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட ஷோபனா, சுரேஷ், செந்தில்குமாா், காா்த்திக்ராஜா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி 2 மாணவர்கள் பலி!

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் 2 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியா... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். ஜெயிலா் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க