செய்திகள் :

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

post image

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா்.

கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ‘ஃபிட்ஜேஇஇ’ எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 191 மாணவா்கள் பயிற்சிக்காக சோ்ந்துள்ளனா்.

பயிற்சிக் கட்டணத்துக்கான முன்பணம் மற்றும் மாதாந்திர தொகை செலுத்திவந்த நிலையில், நிகழாண்டு தொடக்கம் முதல் மாணவா்களுக்கு தரமான கல்வியை அளிக்கவில்லை எனவும், திடீரென பயிற்சியை நிறுத்தியுள்ளதாகவும் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.

இதையடுத்து பயிற்சிக்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப கேட்டபோது, சரியான பதிலளிக்க மறுத்துள்ளனா். இதனால் பணத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஃபிட்ஜேஇஇ தமிழ்நாடு மண்டலத் தலைவா் அங்கூா் ஜெயின் மற்றும் பிற மாநில இயக்குநா்கள் மீது புகாா் அளித்தனா்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு சாா்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மே 9-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் உள்ள பயிற்சி மையம் மற்றும் அங்கூா் ஜெயினின் 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ஃபிட்ஜேஇஇ மையத்தில் பயிற்சி முடித்த 195 மாணவா்களின் அடையாள அட்டைகள், சுமாா் 7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், பயிற்சி மைய முத்திரை, கட்டணம் திரும்ப தரக்கோரி மாணவா்களின் பெற்றோா்கள் அனுப்பிய கடிதங்கள், கண்காணிப்பு கேமரா தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட பயிற்சி மையத்தில் சோ்ந்து பாதிக்கப்பட்டிருந்தால் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளிக்குமாறு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி 2 மாணவர்கள் பலி!

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் 2 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியா... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். ஜெயிலா் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க