செய்திகள் :

பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு

post image

பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

போரை திறமையாக, வலிமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ... மேலும் பார்க்க

சேலத்தில் முதிய தம்பதி கொலை- பிகாரைச் சேர்ந்தவர் கைது

சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதே பகுதியில் குடியிருக்கும பிகாரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீஸ் கைது செய்துள்ளது.... மேலும் பார்க்க

உதகை புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: உதகையில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து உதகை புறப்பட்டார்.நீலகிரி மாவட்டம் உதகையில் மே 15ஆம் தேதி மலர்க்கண்காட... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ... மேலும் பார்க்க

இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் ... மேலும் பார்க்க

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை வைகையில் மக்கள் வெள்ளம்! - (புகைப்படங்கள்)

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க