செய்திகள் :

மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் பஞ்சாப்!

post image

இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மாலைக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை இருநாடுகளும் நிறுத்தி ஒரு உடன்பாட்டை எட்டின.

இந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எல்லை மாவட்டங்களில் மின்தடையை ஏற்படுத்தவில்லை என்றும் மக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பெரோஸ்பூர், ஃபாசில்கா, பதான்கோட், அமிர்தசரஸ், டார்ன் தரன், குருதாஸ்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று மூடப்பட்டன. அதேபோன்று பதான்கோட், குர்தாஸ்பூரில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கலாம் என்று குர்தாஸ்பூரில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானுடன் 553 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இன்று காலை முதல் மக்கள் சந்தைகளில் கூட்டியுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தா... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன்... மேலும் பார்க்க

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட பாதுகாப்பு அமைப்பு: ராஜீவ் கயி

புது தில்லி: பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃ... மேலும் பார்க்க

எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்

புது தில்லி: தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது, எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைரஸ்... மேலும் பார்க்க

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால... மேலும் பார்க்க