செய்திகள் :

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

post image

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் சாய் சுதர்சன் 509 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக 500 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்திய சாய் சுதர்சன் குறைவான போட்டிகளில் 1500 ரன்களைக் கடந்த சச்சின் சாதனையையும் முறியடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமானார். 3 போட்டிகளில் 127 ரன்கள் அடித்துள்ளார்.

தற்போது, டெஸ்ட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால் தொடக்க வீரருக்கான இடம் காலியாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடிக்கொண்டுள்ள சாய் சுதர்சனை தொடக்க வீரராக தேர்வு செய்யாலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 1,396 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 60.69ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துடன் இந்திய அணி ஜூனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை த... மேலும் பார்க்க

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என... மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க