கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.
இவர் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:
ரோஹித் சர்மாவின் இழப்பை இந்தியா எப்படி சமாளிக்கும்?
ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை எந்த ஒரு அணியும் மிஸ் செய்யும். ஆனால், புத்திசாலிதனமான ஒரு கேப்டனாக அவரை யாருமே ஈடுசெய்ய முடியாது. ரோஹித் சர்மா போட்டியை சிறப்பாக கவனிப்பார் என்றார்.
ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம். ஆனால், கேப்டனாக அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா ஏற்கனவே கேப்டனாக அசத்தியிருந்தாலும் நீண்டகால நோக்கில் ஷுப்மன் கில் கேப்டனாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.