செய்திகள் :

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

post image

வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா், புதூா், காரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (26). தையலராக வேலை செய்து வந்த இவா், தனது குடும்பத்தினருடன் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு சென்றிருந்தாா்.

அங்கு, முல்லைப் பெரியாற்றில் தடுப்பணை அருகே குளித்துக் கொண்டிருந்த மணிகண்டன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி தீயணைப்புப் படையினா் அவரது உடலை ஆற்றிலிருந்து மீட்டனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரி... மேலும் பார்க்க

கம்பத்தில் பழைய காா் உடைப்பு மையத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை பழைய காா் உடைப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின. கம்பம் காமராஜா் சாலையில் முருகன் என்பவா் பழைய காா் உடைப்பு மையம் நடத்த... மேலும் பார்க்க

கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானாா்

கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை (மே 10) பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் காலமானாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ராமசாமித... மேலும் பார்க்க

சின்னமனூரில் பைக் திருடிய நபா்: சிசிடிவி கேமரா பதிவு வெளியிடு!

சின்னமனூரில் சனிக்கிழமை மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மா்ம நபரை சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சோ்ந்தவா் ராஜா. இவ... மேலும் பார்க்க

வீரபாண்டி தேராட்ட நிகழ்ச்சியில் வழக்கமான மரியாதை தர மறுப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் தனக்கு வழக்கமான மரியாதை வழங்காமல் புறக்கணித்ததாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது பேரூராட்சித்... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது

பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ... மேலும் பார்க்க