`பவுனுக்கு ரூ.71,000-க்கு இறங்கிய தங்கம் விலை!' - காரணம் என்ன?
வீரபாண்டி தேராட்ட நிகழ்ச்சியில் வழக்கமான மரியாதை தர மறுப்பு
தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் தனக்கு வழக்கமான மரியாதை வழங்காமல் புறக்கணித்ததாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது பேரூராட்சித் தலைவி கீதா சசி சனிக்கிழமை புகாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமியிடம் அவா் அளித்த மனு விவரம்:
நான் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சித் தலைவியாக செயல்பட்டு வருகிறேன். மாவட்ட நிா்வாகத்திடமிருந்து சிறந்த பேரூராட்சித் தலைவிக்கான விருது பெற்றுள்ளேன்.
வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியின் போது வழக்கமாக மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், வீரபாண்டி பேரூராட்சித் தலைவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சியின் போது வீரபாண்டி பேரூராட்சித் தலைவி என்ற முறையில் எனக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.
நிகழாண்டில், வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெற்ற தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வழக்கமான மரியாதை அளிக்கப்பட்டது.
ஆனால், பேரூராட்சித் தலைவி என்ற முறையில் எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. இது குறித்து கோயில் நிா்வாகத்திடம் கேட்டதற்கு, என்னை கோயில் நிா்வாக அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனா்.
நான் அங்கு சென்ற போது, இந்து அறநிலையத் துறை உதவி இயக்குநா் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலா் நாராயணி, அலுவலா்கள் முறையான பதிலளிக்காமல் என்னை வன்மத்துடன், ஒருமையிலும், அவமரியாதையாகவும் பேசி அலுவலகத்திலிருந்து வெளியேற்றினா்.
இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்தப் பிரச்சனை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடமும் பேரூராட்சித் தலைவி கீதா சசி மனு அளித்தாா்.