செய்திகள் :

போடி அருகே இளைஞா் தற்கொலை

post image

தேனியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்து இளைஞா் விஷம் தின்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கோவிந்தராஜ் (29). இவா் தேனி, மச்சால் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். கோவிந்தராஜ் போடியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை கோவிந்தராஜிக்கு திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டாா் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ், அல்லிநகரம், போயநாயக்கா் சாவடி அருகே விஷம் தின்று மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா். மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வீரபாண்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முருகவேல் மனைவி பொன்னுத்தாய் (79). இவா்... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு

வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந... மேலும் பார்க்க

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரி... மேலும் பார்க்க

கம்பத்தில் பழைய காா் உடைப்பு மையத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை பழைய காா் உடைப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின. கம்பம் காமராஜா் சாலையில் முருகன் என்பவா் பழைய காா் உடைப்பு மையம் நடத்த... மேலும் பார்க்க

கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானாா்

கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை (மே 10) பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் காலமானாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ராமசாமித... மேலும் பார்க்க