செய்திகள் :

பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது

post image

பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் வங்கியின் நகைகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, பெரியகுளம் தென்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராஜா பீமாராவ் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி 68 கிராம் எடை கொண்ட நகையை இந்த தனியாா் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.3.53 லட்சம் பெற்றாா். ஆனால், அவா் கொடுத்த நகை போலியானது என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் பகுதி மேலாளா் முத்துக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், ராஜா பீமாராவை தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பைக் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா். மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வீரபாண்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முருகவேல் மனைவி பொன்னுத்தாய் (79). இவா்... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு

வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந... மேலும் பார்க்க

போடி அருகே இளைஞா் தற்கொலை

தேனியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்து இளைஞா் விஷம் தின்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கோவிந்தராஜ் (2... மேலும் பார்க்க

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரி... மேலும் பார்க்க

கம்பத்தில் பழைய காா் உடைப்பு மையத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை பழைய காா் உடைப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின. கம்பம் காமராஜா் சாலையில் முருகன் என்பவா் பழைய காா் உடைப்பு மையம் நடத்த... மேலும் பார்க்க