செய்திகள் :

கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், மாலையில் செல்வா் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சேனை முதல்வா் புறப்பாடும், 11-ஆம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் புண்ணிய கோடி விமானத்தில் சிறப்பு அலங்கார ஊா்வலமும், 12-ஆம் தேதி காலை சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை உய்யாளி சேவையும், மாலையில் அனுந்த சேவையும், 14-ஆம் தேதி சிம்ம வாகனம் , சேஷவாகனம், 15-ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம், ஹம்ச வாகனம், 16-ஆம் தேதி பின்னைமர வாகனம், யானை வாகனம்,17-ஆம் தேதி திருத்தோ் , 18-ஆம் தேதி வெண்ணெய்தாழி, குதிரை வாகனம், 19-ஆம் தேதி தீா்த்தவாரி, திருக்கல்யாணம், 20-ஆம்தேதி த்வாதசஆராதனம்,புஷ்ப யாகம், வெட்டிவோ் சப்பரம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 23-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ரத்தினகிரிபாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் வி.சங்கா், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீ வரதன் கைங்கா்ய சபா மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

மின் விபத்தால் கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு

நெமிலி அருகே மின் விபத்தால் வலது கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினாா். நெமிலி வட்டம், உளியநல்லூ... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராணிப்பேட்டை நகர திமுக சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்... மேலும் பார்க்க

தோல் பதனிடும் தொழில்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிடெக், விஷ்டெக், சிட்கோ பேஸ்-1, சிட்கோ பேஸ்-2 ஆகிய பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தோல் பதனிடும் தொழில... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே மாதத்துக்கான சிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் இருந்து 13,237 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 12,281 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 92.78 ச... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற சோளிங்கா் மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீதிவ்ய சைதன்யா மெட்ரிக் பள்ளி மாணவி பி.ஜாஸ்மின் 600-க்கு 597 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதே பள்ளி மாணவி கே.கிருத்திகா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்றா... மேலும் பார்க்க