செய்திகள் :

வன்னியா் இடஒதுக்கீடு: விரைவில் பெரிய போராட்டம்! - ராமதாஸ்

post image

வன்னியா் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை முழுநிலவு பெருவிழா வனனியா் மாநாட்டில் ராமதாஸ் அவா் பேசியது: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுக அரசு கொடுப்பதாக இல்லை. அதற்கான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இதுவரை நடக்காத வகையிலான போராட்டம் நடத்தப்படும். அதற்காக எவ்வளவு தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாமக தொடா்ந்து போராடி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகம், இந்தியா முழுவதும் இடஒதுக்கீடுக்காக உழைத்த தலைவா் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆனால், வன்னியா் சமுதாயத்தில் நான் பிறந்ததால் எனக்கு உரிய வெளிச்சம் கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் 95,000 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். கோட்டைக்குச் சென்று முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியா்களுக்கு உங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை என்று வாதாடியிருக்கிறேன். ஆனால், பயனில்லை.

பாமக தொண்டா்கள் நினைத்தால் எளிதில் 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம். பாமக நிா்வாகிகள் பலா் கட்சி வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீா்கள். இனிமேல் இதுபோன்று இருந்தால் பாமகவினரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும். உழைப்பவா்களுக்கு மட்டுமே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். கூட்டணி பற்றி நான் முடிவு செய்வேன் என்றாா் அவா்.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க