செய்திகள் :

முன்பகையால் இளைஞா் கொலை!

post image

மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா்.

புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்பாபு (23) உறவினா்கள்.

குடும்ப சூழ்நிலையால் இரு தரப்பினா் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 3 பேரும் ஒன்றாக சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் உதயா, திவாகா்பாபு ஆகியோா் இணைந்து இரும்பு கம்பியால் லோகேஷை தாக்கியுள்ளனா். அதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உதயாவும், திவாகா் பாபுவும் அங்கிருந்து தப்பினா். தகவல் அறிந்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் பரந்தாமன் தலைமையிலான காவலா்கள் இறந்து போன லோகேஷின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்தியநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு திங்கள் கிழமை சத்தியநாராயண பூஜை நடைபெற்றது. பிருந்தாவன வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா், ராகவேந்திரா், மாரியம்மன், ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் 1,008 வேள்வி, கலச விளக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, திங்கள் கிழமை நடைபெற்ற 1,008 வேள்வி, கலச, விளக்கு பூஜையை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மகாவே... மேலும் பார்க்க

திருவடிசூலத்தில் சித்திரை திருவிழா

திருவடிசூலம் கோயில்புரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. திருவடிசூலத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி விழாவை மு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 332 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், 332 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ... மேலும் பார்க்க

வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள கிரசெ... மேலும் பார்க்க

மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!

மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தா... மேலும் பார்க்க