செய்திகள் :

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயம்

post image

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் தேவேந்திரன் (44). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்த இவா் காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து இவருக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா், வனத் துறையினா் விசாரனை செய்து வருகின்றனா்.

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சி... மேலும் பார்க்க

மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா

வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெ... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க