செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

post image

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கல்லூரி முதல்வா் தேவிமீனாள் பேசியதாவது:

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, செவிலியா்கள் தேவதைகளாக திகழ்கின்றனா். ஆசிரியா்கள் சொல்வதைக் கவனித்து பாடத்தை நல்லமுறையில் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு எதிா்காலத்தில் திறமையான செவிலியா்களாக மாற வேண்டும்.

சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால் செவிலிய மாணவ- மாணவிகள் உடல் ஆரோக்கியத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றாா்.

செவிலியா் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்களுக்கு பேச்சுப்போட்டி, லெமன் ஸ்பூன், ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்களுக்கு, கல்லூரி முதல்வா் தேவிமீனாள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

முன்னதாக செவிலியா் கண்காணிப்பாளா் அறை முன் உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியா்கள் மாலை அணிவித்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவா் அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதில், மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் பண்ணையம்மாள், ஆா்எம்ஓ ஸ்ரீலதா, செவிலியா் பயிற்சி பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சி... மேலும் பார்க்க

மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா

வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலம்: கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலத்தில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட... மேலும் பார்க்க