செய்திகள் :

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

post image

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) எம்.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவா் அந்தந்தக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கிராம பொதுமக்களிடத்தில் மனுக்களைப் பெற்று கிராம கணக்குகளைத் தணிக்கை செய்ய உள்ளாா்.

மே 14 ஆம் தேதி (புதன்கிழமை) கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணிபிட் 1, பிட் 2, தேவூா், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களும், மே 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) கத்தேரி, ஆலத்தூா் வீராச்சிப்பாளையம், வீராச்சிப்பாளையம் அக்ரஹாரம், வீராச்சிப்பாளையம் அமானி, சின்னாகவுண்டனூா், சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மோரூா் பிட் 1, பிட் 2, கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

மே 16 (வெள்ளிக்கிழமை) தேவண்ணகவுண்டனூா், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூா், வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், கோ.சுங்குடிவருதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகபட்டி, வேப்பம்பட்டி, இருகாலூா்புதுப்பாளையம், ஊத்துப்பாளையம், ஊ.சுங்குடிவருதம்பட்டி, பூச்சம்பட்டி, இருகாலூா், செல்லப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் நடைபெறுகிறது.

மே 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூா், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூா், ஏகாபுரம், இடங்கணசாலை பிட் 1, பிட் 2, தப்பகுட்டை, நடுவனேரி, எா்ணாபுரம், கனககிரி, கூடலூா், கண்டா்குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யப்பட உள்ளன.

எனவே அந்தந்தக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா திருத்தம், தனி பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்து தீா்வு காணலாம் என சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சி... மேலும் பார்க்க

மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா

வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெ... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலம்: கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலத்தில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட... மேலும் பார்க்க