மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!
ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மே மாதத்துக்கான சிறப்பு முகாம் 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், கைப்பேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகளுக்கு தீா்வு காணப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள், மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.
நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடு மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்களில் குறைபாடு இருப்பின், மக்கள் குறைகளை தெரிவித்தால், விரைந்து தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.