செய்திகள் :

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

post image

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போா்ப் பதற்றம் அதிகரித்ததால், இருநாடுகளும் அவதிக்குள்ளாகின.

பாகிஸ்தானை பொருத்தவரை, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை இந்தியா உடைத்துவிட்டது. தமக்கு மிக வலிமையான, தீா்க்கமான தலைமை உள்ளது என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது’ என்றாா்.

ஓய்வுபெற்ற கா்னல் அனில் பட் கூறுகையில், ‘பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிக்கக் கூடாது, அந்தக் குழுக்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில், இருநாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஏற்பட்டிருக்கக் கூடும்.

பாகிஸ்தானின் வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது, அந்த உடன்படிக்கை பின்பற்றப்படுமா? எந்த அளவுக்கு நன்றாகப் பின்பற்றப்படுகிறது என்பதை பாா்க்க வேண்டும். பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், அதற்கான பதிலடி இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் தற்போது ஏற்பட்ட மோதலில் இருந்து பாகிஸ்தான் சில பாடங்களைக் கற்றிருக்கும் என நம்புவோம்’ என்றாா்.

ஓய்வுபெற்ற பிரிகேடியா் குஷால் தாக்குா் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் முக்கிய பங்கு வகித்தாா். அவா் கூறுகையில், ‘இருநாடுகளும் மோதலை கைவிட மேற்கொண்ட முடிவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பிரதமா் மோடியின் தலைமை, இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் ராஜீய உறவுகள், பயங்கரவாதத்தை எள்ளளவும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி’ என்றாா்.

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க