செய்திகள் :

புகாருக்கு உள்ளான அா்ச்சகா் கோயில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம்

post image

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அா்ச்சகா் எந்த வித பூஜையிலும் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் ஸ்வேதாா்க் அா்ச்சகா் தாக்கல் செய்த மனு:

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த காப்புக் கட்டுதல், பிரகார பூஜைகள் உள்ளிட்டவைகள் செய்வதற்கு திருட்டுப் புகாருக்குள்ளான அா்ச்சகா் சந்திரசேகரன் என்ற ஸ்ரீகாந்த்துக்கு தடை விதிப்பதுடன், அவா் மீதான புகாா்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை புகாருக்கு உள்ளான அா்ச்சகா் எந்த பூஜையிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவா் மீதான திருட்டுப் புகாரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துண... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க

மதுரையில் மே 16-இல் இந்திய-ரஷிய பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி

மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து வோல்கோ கிராப்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நடல்ய அல்சுக், சென்னை ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல... மேலும் பார்க்க