மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள், தொழிற்கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் மதுரை கோ.புதூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வர வேண்டும் என்றாா் அவா்.