செய்திகள் :

எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

post image

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி வந்தது. அப்போது பாதுகாப்புப் படை வீரர் பி.கே. ஷா அட்டாரி-வாகா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எல்லை தாண்டியதாக அவரை பாகிஸ்தான் கடந்த ஏப். 23 ஆம் தேதி கைது செய்தது.

அவரை மீட்க இந்தியா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுள்ளார்.

பஞ்சாபில் உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதி வழியாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

நெறிமுறைகளின்படி வீரர் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க |

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, வ... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன... மேலும் பார்க்க

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க